
ஷா ஆலம் போலீஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் இருந்த 33 வயது ஆடவர் நேற்று முன்தினம் மரணமுற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
போதைப்பொருள் குற்ற வழக்கில் ஜூலை 29ஆம் தேதி கைது செய்யப்பட்டு விசாரணையில் வைக்கப்பட்டிருந்தபோது, அவர் மூர்ச்சையுயுற்று கிடந்துள்ளார்.
நேற்று முன்தினம், காலை 4.59 மணியளவில் அவர் மூர்ச்சையுற்று கிடந்த பின்னர், ஷா ஆலம் மருத்துவ அதிகாரிகள் அவரைச் சோதித்ததில் அவர் மரணமுற்றதாகத் தெரிவித்தனர்.
அவரின் உடல் பிரேத பரிசோதைனைக்காக கிள்ளான் தெங்கு அம்புவான் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அது திடீர் மரணம் என்று வகைப் படுத்தப்பட்டு, மரணத்திற்கான காரணம் கண்டறியப்படும்.
