
இறந்த முஸ்லிம் அல்லாதவர்களைச் சாந்தியடைய வேண்டுமென்று முஸ்லிம்கள் சொல்லக் கூடாதென கூட்டரசுப் பிரதேச முஃப்டி அலுவலகம் தெரிவித்துள்ளது.
வேற்று மத நம்பிக்கை கொண்டவர்களுக்காக மன்னிப்பு கோர முஸ்லிம்கள்கள் அனுமதிக்கப் படுவதில்லை என்றும் ‘ரெஸ்ட் இன் பீஸ்’ அல்லது ‘ஆர்ஐபி’ என்று கூறுவது முஸ்லிம் அல்லாதவர்களின் பிரார்த்தனையின் ஒரு வடிவம் என்பதால், அம்மாதிரி முஸ்லிம்கள் செய்ய முடியாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரிட்டன் அரசியார் இரண்டாவது எலிசபெத்தின் மறைவை ஒட்டி அவருக்கு ரெஸ்ட் இன் பீஸ் என்று சொல்லலாமா என்ற கேள்விக்கு முஃடியின் அலுவலகம் அவ்வாறு பதிலளித்துள்ளது.
