
இங்குள்ள தங்குமிடப் பள்ளி ஒன்றில் மாணவர்களிடையிலான பகடிவதைச் சம்பவத்தில் ஈடுபட்ட 9 மாணவர்கள் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.
இவ்வாண்டு ஆகஸ்டு 23ஆம் தேதி இரவு 11.30 மணிளவில் இந்த 16 வயது மாணவர்கள் அதே பள்ளியில் பயின்று வந்த 15 வயது மாணவர்கள் மூவரைக் குத்தியும், காலால் எட்டி உதைத்தும் அவர்களுக்குக் காயம் விளைவித்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஓராண்டு சிறையும் 2,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம்.
