
தாம் அம்னோவை விட்டு விலகப் போவதாக ஊடக ங்களில் உலவும் செய்தியில் உண்மையில்லை என்றும் தாம் இன்றும், இனி என்றும் அம்னோவில்தான் இருக்கப் போவதாக சுகாதார அமைச்சர் Khari Jamaludin (கைரி ஜமாலுடின்) தெரிவித்தார்.
2009ஆம் ஆண்டில் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவாராகத் வந்தபோது, தாம் ஒதுக்கப்பட்டதாகவும் அப்போதும் தாம் அம்னோவில் இருந்து விலகவில்லை என்றும் கைரி தெரிவித்தார்.
2013ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அம்னோ தோல்வியடைந்த போது, தம்மீது குறை கூறப்பட்டபோதும் தாம் அம்னோவிலேயே இருந்ததாகவும், தம்மீது எவ்விதமான கருத்துகள் விமர்சனங்கள், நிந்தனைகள் கூறப்பட்டாலும் கட்சியை விட்டு விலகப் போவதில்லை என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
Rembau (ரெம்பாவ்) நாடாளுமன்றத் தொகுதியில் அவர் தற்போது போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து, கைரி அம்னோவை விட்டு விலகுவார் என்று ஆரூடம் கூறப்படுகிறது.
