26.4 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

சொந்த ஊரில் இருந்து வேலைக்குச் சென்றபோது விபத்தில் சிக்கிய நபருக்கு சொக்சோ இழப்பீடு

கூலிமில் வேலை செய்து வந்த என். சத்தியசீலன் சொந்த ஊரான ஈப்போவுக்குச் சென்று, 2016 அக்டோபர் 16ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை வேலைக்குச் செல்லும்போது விபத்தில் சிக்கிப் படுகாயம் அடைந்தார்.
அவரின் சொக்சோ இழப்பீட்டை அதன் நிர்வாகம் தர மறுத்த பின்னர், உயர்நீதிமன்றமும் வழக்கைத் தள்ளுபடி செய்தது. பின்னர், முறையீட்டு நீதிமன்றத்திற்கு அவ்வழக்கு சென்றது.
அதனை விசாரித்த மூவர் அடங்கி அமர்வு, சத்தியசீலன் தமது வார விடுமுறையான ஞாயிற்றுக் கிழமையன்று ஈப்போவில் இருந்து வேலைக்குச் சென்றதை அவர் கூலிமில் உள்ள தமது இருப்பிடத்தில் இருந்து வேலைக்குச் சென்றதாக எடுத்துக் கொண்டு, அவருக்கு சொக்சோ இழப்பீட்டை வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles