
வரும் பருவமழைக் காலத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்படுமானால், அதனையொட்டி பினான்கு மாநில சட்டமன்றம் கலைக்கப்படாது என்று பினாங்கு முதலமைச்சர் செள கோன் இயோவ் தெரிவித்தார்.
ஆண்டு இறுதியில் பருவ மழையின்போது, வெள்ளம் ஏற்படலாம் என்பதால் அந்நேரத்தில் தேர்தலை நடத்துவது வாக்காளர்களின் உயிருக்கு ஆபத்து என அச்சம் நிலவுகிறது.
அக்கால கட்டத்தில் பொதுத்தேர்தலை நடத்த நாடாளுமன்றம் கலைக்கப்படுமானால், அதற்கேற்ப பினாங்கு சட்ட மன்றத்தைக் கலைக்க மாட்டோம் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
