
அரசியல் நன்கொடை, நிதியம் சம்பந்தமான சட்ட வரைவு நவம்பர் மாதத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று சட்ட விவகார அமைச்சர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபார் தெரிவித்தார்.
இந்த உத்தேச சட்ட வரைவினை அமைச்சரவை ஏற்றுக் கொண்ட நிலையில் அரசு சாரா இயக்கங்கள், அது சார்ந்த சம்பந்தப்பட்டோருடன் கலந்தாய்வு செய்த பின்னர், அச்சட்ட வரைவு மெருகூட்டப்பட்டு நாடாளுமன்ற விவாதத்திற்காகத் தாக்கல் செய்யப்படும்.
அதனை ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழு மனதாக ஏற்றுக் கொள்வர் என தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.
