
30 ஆண்டு காலம் ஓய்வு பெறத் திட்டமிடும் மலேசியர்கள் வாழ்நாள் முழுவதும் வசதியாக வாழ விரும்பினால் ரிம 900,000 சேமிப்பு வேண்டுமெமென ஊழியர் சேமநிதி வாரிய அதிகாரி Noorhisham Husain (நூர்ஹிஷாம் ஹுசைன்) தெரிவித்தார்.
கோலாலம்பூரில் சாதாரணமாக வாழ மேற்கண்ட தொகை வேண்டுமென குறிப்பிட்ட அவர், மக்களில் 4 விழுக்காட்டினர் மட்டுமே அவ்வாறு செய்ய முடியும் என்று தெரிவித்தார்.
கணிப்பின் படி மலேசியாவில் Alor Star (அலோர் ஸ்டார்) நகரமே ஓய்வு பெற மலிவான இடமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது 54 வயதுடையவர்களில் 57 விழுக்காட்டினருக்கு 50,000 ரிங்கிட் மட்டுமே தங்களது ஈபிஎஃப் இருப்பில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
