
சர்ச்சையில் மூழ்கியிருந்த சுபாங் ஜெயா, சீபீல்டு சக்தி மாரியம்மன் ஆலயத்திற்கு சன் நாளிதழ் சேகரித்த நன்கொடை ரிம. 251,490.576ஐ அதன் செயல்முறை இயக்குநர் ரிக்கி இங் நேற்று வழங்கினார்.
இந்த நன்கொடையானது புதிய ஆலயத்தை அமைக்கவும் அதனை புதுப்பிக்கவும் பயன்படுத்தப்படும்.
கடந்த காலத்தில் இந்த ஆலயத்தில் நேர்ந்த அசம்பாவிதம் போன்று நடைபெறுவதைக் தடுக்க வேண்டுமென ரிக்கி கேட்டுக் கொண் டார்.
2017 ஜூம் மாதம் இந்த ஆலயத்தை அகற்ற உத்தரவிட்டப்பட்டதை அடுத்து, அங்கு இரு அணிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு. கலவரம் மூண்டு ஒருவர் பலியானது குறிப்பிடத்தக்கது. அப்பிரச்சினை தற்போது மெல்ல, மெல்ல அடங்கியுள்ளது.
நன்கொடைக்கு நன்றி தெரிவித்த தலைவர் கே.கே. செல்லப்பா, பக்தர்களின் வசதிக்காக ஆலயத்தைப் புனரமைக்க 1.7 மில்லின் ரிங்கிட் தேவைப்படுவதாகத் தெரிவித்தார்.
