
கோவிட்-19 பாசிட்டிவ் ஆனால் ஆபத்தான நிலையில் இல்லாத நபர்கள் 15வது பொதுத் தேர்தலில் (GE15) வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். இருப்பினும், தேர்தல் ஆணையத்தால் (EC) அறிவிக்கப்படும் கடுமையான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளுக்கு அவர்கள் இணங்க வேண்டும் என்று அவர் கூறினார். தேர்தல் செயல்முறை சுமூகமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக SOP இல் சேர்க்க பல பரிந்துரைகளை தேர்தல் ஆணையத்திடம் சுகாதார அமைச்சு வழங்கியுள்ளதாக டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார். கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியாக பிரத்தியேக இடங்கள் இருக்கும். மற்றவர்களுடன் சேர்ந்திருக்காது என அவர் குறிப்பிட்டார்.
