
சபாவை எக்காலத்திலும் பிலிப்பைன்ஸிடம் ஒப்படைக்கவோ அல்லது அதன் ஆளுகைக்கு உட்படுத்தவோ மாட்டாது என்று பராமரிப்பு அரசாங்கத்தின் சட்டத்துறை அமைச்சர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபார் தெரிவித்தார்.
சபாவை சொந்தம் கொண்டாடும் சூலு சுல்தானின் வாரிசுகளுக்கு மலேசியா 1,492 கோடி அமெரிக்க டாலரை இழப்பீடாக வழங்க வேண்டுமென்ற தீர்ப்பை அளித்த பாரிசின் நீதிமன்றத்தின் முடிவை மலேசியா அனுசரிக்கத் தேவையில்லை என்றும், அது தனிப்பட்ட வழக்கு என்பதால் அதனை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது மலேசியாவின் இறையாண்மைக்கு எதிரானது என்பதால், அரசு இதனை எந்த விலை கொடுத்தும் நாட்டைத் தற்காக்கத் தயாராக இருப்பதாக வான் ஜுனைடி தெரிவித்தார்.
