
பக்காத்தானின் உறுப்புக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு அக்டோபர் 20ஆம் தேதி நடைபெறவிருக்கும் கூட்டணி மாநாட்டில் அறிவிக்கப்படும் என்று அதன் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அம்மாநாடு ஈப்போவில் Nga Kor Ming (ங்கா கோர் மிங்) தலைமையில் நடைபெறும் என்றும் அது எல்லோருடைய ஆதரவையும் பெறும் என்றும் அன்வார் தெரிவித்தார்.
அம்மாநாட்டில் தேர்தலில் பயன்படுத்த வேண்டிய சின்னம், தொகுதிப் பங்கீடு போன்றவை விவாதிக்கப்படும்.
தேசிய முன்னணி, பெரிக்காத்தான் நேஷனலைப் போலள்ளாமல், பக்காத்தான் உறுப்புக் கட்சிகள் ஒத்த கருத்தோடு இத்தேர்தலை எதிர்கொள்வதாகவும் தங்களுக்கு மக்களைப் பாதுகாப்பதே முக்கிய நோக்கமாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
