
சுங்கை பூலோ தொகுதியில் முன்னர் அறிவித்தது போன்றே ஆர்.ரமணன் போட்டியிடுவார் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் Amirudin Shari (அமிருடின் ஷாரி) திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
தேசிய முன்னணியின் சார்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் அத்தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்ட பின்னர், போட்டி கடுமையாக இருக்கும் என்பதால் அத்தொகுதியில் வேறொருவர் போட்டியிட பரிசீலிக்கப்படும் என்று பிகேஆரின் துணைத் தலைவர் Rafizi Ramli (ரபிஸி ரம்லி) அறிவித்திருந்தார்.
மஇகாவின் முன்னாள் பொருளாளரான ரமணன் அத்தொகுதியில் போட்டியிடுவதை எதிர்த்துச் சிலர் போர்க்கொடி தூக்கியதால், அவரை மாற்ற வேண்டுமென்ற கருத்து நிலவி வருகிறது.
