
தமது கட்சியினர் சரவாக்கில் நுழைவற்கான சிலருக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை சரவாக் முதலமைச்சர் Abang Johari அகற்ற வேண்டுமென அன்வார் இப்ராஹிம் அறைகூவல் விடுத்தார்.
இதற்கு முன்னர், சரவாக்கில் நுழைவதற்கு பிகேஆரின் துணைத் தலைவர் Rafizi Ramli, உதவித் தலைவர் Nurul Izzah Anwar ஆகியோருக்கு அம்மாநில அரசு தடை விதித்திருந்தது.
பரஸ்பர நல்லெண்ண அடிப்படையில், அபாங் ஜொஹாரி அத்தடையை அகற்றி, பக்காத்தான் சார்பில் அங்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாகத் தேர்தல் பரப்புரை நிகழ்த்த உதவ வேண்டுமென அன்வார் கேட்டுக் கொண்டார்.



