
🔊To listen to this news in Tamil, Please select the text.
பத்துமலை திருத்தலத்தில் வரும் ஜனவரி 15ஆம் தேதி காலையில் மாபெரும் பொங்கில் விழாவோடு புத்தாண்டு கொண்டாட்டமும் நடைபெறும் என ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் பொங்கல் வைப்பதோடு சமய, பண்பாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்றால் ஈராண்டுகளுக்கு மேலாகத் தடைபட்டிருந்த இந்தப் பொங்கல் விழா இவ்வாண்டு மீண்டும் நடைபெறவிருப்பதால், பொதுமக்கள் இதில் கலந்து கொள்ள வேண்டுமென தேவஸ்தானத் தலைவர் நடராஜா கேட்டுக் கொண்டார்.
