
🔊To listen to this news in Tamil, Please select the text.
சீன புத்தாண்டை கொண்டாடவிருக்கும் வேளையில், வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்படும் மேண்டரின் ஆரஞ்சு பழங்களுக்கான தேவை அதிகமாக இருக்கும்.
இந்நிலையில், மாநகர்மன்ற அமலாக்க அதிகாரிகள் சிலர் கூச்சாய் லாமா வர்த்தகப் பூங்காவில் ஆரஞ்சு பழ விற்பனையாளர்கள் உரிமத்திற்கு முரணாக வியாபாரம் செய்ய லஞ்சம் வாங்கியிருப்பதாகச் செய்தி பரவியுள்ளது.
அது சம்பந்தமாகக் கருத்துரைத்த கோலாலம்பூர் மேயர் Mahadi Che Ngah (மஹாடி சே ங்கா), லஞ்ச ஊழலில் ஈடுபட்டிருப்போர் மீது பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திட்டவட்டமாக எச்சரித்தார்.
