
செலாங்கூர் மாநிலத்தின் 15வது சட்டமன்றத்தின் நான்காவது அமர்வு தொடக்க விழா காலை ஷா ஆலம்பூரில் நடைபெற்றது.
இந்த நிகழ்வை செலாங்கூர் சுல்தான் திறந்து வைத்தார். இவ்விழாவில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் Y B குணராஜ் கலந்து கொண்டார்.
நிகழ்வில் சுல்தான் வழங்கிய உரையும் வழிகாட்டுதலும் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கும் மக்களின் நலனிற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததாக குணராஜ் தெரிவித்தார்.
“மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நலனிற்கும் சுல்தானின் அருளுரைகள் மிக முக்கியமானவை. இந்த அமர்வு சிறப்பாக நடைபெற்று, மக்களுக்கு பெரும் நன்மை அளிக்கும் என நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
