
🔊To listen to this news in Tamil, Please select the text.
வரும் மாநிலத் தேர்தல்களில் பக்காத்தான் ஹராப்பான் கீழுள்ள சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு ஆகிய மாநிலங்களை தக்கவைத்துக் கொள்வதோடு கெடாவைக் கைப்பற்றும் நடவடிக்கை முடுக்கி விடப்படும் என பக்கத்தான் கூட்டணியின் தலைமைச் செயலாளர் சைஃபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.
அதோடு கிளந்தான், திரெங்கானு ஆகிய மாநிலங்களில் வலுமுக்க எதிர்க்கட்சியாக பக்காத்தான் செயல்பட உறுதி கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தேசிய முன்னணி, மூடா, பிஎஸ்எம் ஆகிய கட்சிகளோடு ஒத்துழைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
15ஆவது பொதுத்தேர்தலுக்குப் பின்னர் பக்காத்தான், தேசிய முன்னணி, காபுங்கான் பார்ட்டி சரவாக்(ஜிபிஎஸ்), காபுங்கான் ராக்யாட் சபா(ஜிஆர்எஸ்) ஆகிய கட்சிகளோடு இணைந்து ஆட்சியமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
