
🔊To listen to this news in Tamil, Please select the text.
பெரிக்காத்தான் ஆட்சியின்போது பல்வேறு தொழில்துறை ஊக்குவிப்பு நடவடிக்கைகளில் செலவிடப்பட்ட நிதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நிதி முறைகேடு எதுவும் நடைபெற்றிருக்கவில்லை என்று அனைத்துலக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரும் முன்னாள் நிதியமைச்சருமான தெங்கு ஸப்ருல் அஸிஸ் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஊக்குவிப்புத் திட்டங்களில் நிதிக்கான செலவினம் வெளிப்படைத் தன்மையோடு செலவிடப்பட்டதாக்வும் அது சம்பந்தமான எந்த விசாரணைக்கும் தாம் முழு ஒத்துழைப்பைத் தரத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், ஊக்குவிப்புத் திட்டங்களில் நிதி முறைகேடு நடந்திருப்பதாகப் புகாரைப் பெற்றிருப்பதாகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளது குறிப்பிட்டத்தக்கது.
