
🔊To listen to this news in Tamil, Please select the text.
நாட்டில் நிலவும் முட்டை தட்டுப்பாட்டை நிவர்த்திக்க தமிழ்நாடு நாமக்கல்லில் இருந்து முட்டை இறக்குமதி செய்யப்படுகிறது.
அந்த முட்டைகளுக்கு 50 காசு விலை கொடுக்கப்படும்போது, உள்ளூரில் உற்பத்தியாகும் முட்டைக்கு 41 காசு மட்டுமே வழங்கப்படுகிறது. அதிக விலை கொடுத்து வெளிநாட்டில் இருந்து முட்டை இறக்குமதி செய்வது தேவைதானா என மசீச தலைவர் Wee Kah Siong (வீ கா சியோங்) கேள்வி எழுப்பினார்.
அங்கிருந்து முட்டைகள் வர 3லிருந்து 5 வாரங்கள் கூட ஆகும் நிலையில், அவை கெட்டுப் போகாமல் இருப்பதை உறுதி செய்வது யார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், வெளிநாட்டு முட்டைகளுக்கு வழங்கப்படும் 50 காசை உள்ளூர் கோழிப் பண்ணை உரிமையாளர்களுக்கு வழங்குவதில் நட்டம் ஏதுமில்லை என்று வீ கா சியோங் குறிப்பிட்டார்.



