
🔊To listen to this news in Tamil, Please select the text.
2022ஆம் ஆண்டுக்கான மலேசிய சான்றிதழ் தேர்வு (எஸ்பிஎம்) ஜனவரி 30லிருந்து மார்ச் 15ஆம் தேதி வரை அறிவியல் செய்முறை, வாழ்மொழி, கேட்கும் திறன் சோதனைகளும் நடைபெறும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
பிப்ரவரி 20லிருந்து மார்ச் 15ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் எழுத்துப்பூர்வமான தேர்வில் மொத்தம் 403,637 மாணவர்கள் பங்கெடுத்துக் கொள்வர்.
தேர்வுகளைச் செம்மையாக நடத்த 3,355 சோதனை மையங்கள் தயார்படுத்தப்- பட்டிருப்பதாகவும் 131,318 தேர்வு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதவரும் மாணவர்கள் அடையாளக் கார்டை உடன் கொண்டுவர வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
