
🔊To listen to this news in Tamil, Please select the text.
சபா, தாவாவில் அண்மையில் நடந்த கொலை சம்பந்தமாக 8 போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக சபா போலீஸ் ஆணையர் Idris Abdullah (இட்ரிஸ் அப்துல்லா) தெரிவித்தார்.
அது சம்பந்தமாக இப்போதைக்கு எந்தவிதமான அறிக்கையும் வெளியிட இயலாது என்று தெரிவித்த அவர், இதனை விசாரிக்க சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
விசாரணை பாரபட்சமின்றி நேர்மையாக நடைபெறும் என்றும் அது முடிவுற்ற பின்னர், செய்தியாளர் கூட்டத்தில் விவரம் தெரிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
