
🔊To listen to this news in Tamil, Please select the text.
கிள்ளான் தாமான் மஸ்னாவில் அடிக்கடி திடீர் வெள்ளம் ஏற்பட்டு பொதுமக்களுக்குப் பெரும் துன்பத்தை அளித்து வருவதைத் தடுக்க அண்மையில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் அவர்களின் முன்னெடுப்பில் கலந்தாய்வுக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
அதனையடுத்து, அடுத்த வாரம் தாமான் மஸ்னாவில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளவிருப்பதாகத் டாக்டர் குணராஜ் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைக்கு அங்கீகாரத்தை அளித்துப் பெரிதும் உதவிய சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி, செந்தோசா எம்பியின் பிரதிநிதிகள், கிள்ளான் மாவட்ட அதிகாரிகளுக்கும் தமது மனமுவந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகத் டாக்டர் குணராஜ் தெரிவித்தார்.
