
🔊To listen to this news in Tamil, Please select the text.
அம்னோவில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டேன் என்று கைரி ஜமாலுடின் கூறினார். கடந்த வெள்ளிக்கிழமை கூடிய அம்னோஉச்சமன்றம் என்னை கட்சியில் இருந்து நீக்கியது. கட்சிக்கு எதிராக செயல்பட்டேன் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அம்னோ உச்சமன்றத்தின் இந்த முடிவை ஏற்றுக் கொள்கிறேன். அதே வேளையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டேன். அதற்கான அவசியமும் இல்லை. மேலும் என்னை நீக்கியதற்காக அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஸாஹித் ஹமிடியை எதிர்த்து வஞ்சம் தீர்த்து கொள்ள முயற்சிக்க மாட்டேன். அவர் இன்னும் என் நண்பர்தான் என்று கைரி கூறினார்.
