
🔊To listen to this news in Tamil, Please select the text.
உயர்கல்வி மாணவர்கள் அரசின் நிர்வாகம் குறித்து தங்களது கருத்துகளையும் விமர்சனத்தையும் தெரிவிக்க உரிமை பெற்றிருப்பதாகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
கருத்துகளைத் தெரிவிக்க மாணவர்களுக்கு அனுமதியுண்டு என்பதால் அது அவர்களின் எண்ணங்களை புது வகையாகச் சிந்தித்து, புத்தாக்க கருத்துகளை வெளியிட உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
கருத்துச் சுதந்திரம் இருந்தாலும் மாணவர்கள் யாரையும் நிந்தித்தும், இன, சமய உணர்வுகளைத் தூண்டும் வகையிலான தீவிரவாதக் கருத்துகளைத் தவிர்க்கும்படி அன்வார் ஆலோசனை கூறினார்.


