
🔊To listen to this news in Tamil, Please select the text.
1977இல் இருந்து இவ்வாண்டு மார்ச் மாதம் வரை பொதுமக்களால் கோரப்படாத பணம் 1,100 கோடி ரிங்கிட் அரசின் கருவூலத்தில் இருப்பதாக நிதித் துணையமைச்சர் Ahmad Mazlan (அமாட் மஸ்லான்) மக்களவையில் தெரிவித்தார்.
மேற்கண்ட காலகட்டத்தில் பல்வேறு நிறுவனங்களில் இருந்து மொத்தம் 1,410 கோடி ரிங்கிட்டைப் கருவூலம் பெற்றிருப்பதாகவும் அதில் 320 கோடி ரிங்கிட் சம்பந்தப்பட்டோரின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
கோரிக்கையற்று இருக்கும் நிதியை சம்பந்தப்பட்டோரின் வாரிசுகளுக்குச் செலுத்த அரசு egumis (இகுமிஸ்) எனும் கைப்பேசி செயலியை அறிமுகப்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்தார்.
கோரப்படாத நிதியை முறைப்படி நிர்வகிக்க அது சம்பந்தமான சட்டம் திருத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
