
🔊To listen to this news in Tamil, Please select the text.
மலாக்கா பொது மருததுவமனையில் பழுதடைந்த மின்தூக்கி சரி செய்யப்பட்டு விட்டது என சுகாதார அமைச்சர் டாக்டர் Zaliha Mustafa டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மலாக்கா மருத்துவமனையின் இயக்குனரிடம் தாம் நேரடியாக தொடர்புகொண்டு பேசியதாக டாக்டர் Zaliha கூறினார். பொதுப் பணி அமைச்சின் குத்தகையாளரால் பழுதுபார்க்கப்பட்ட பின் நேற்று மாலையிலிருந்து அந்த மின்தூக்கி மீண்டும் செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். மின்தூக்கி பழுதடைந்ததால மருத்துவமனை பணியாளர் ஒருவர் சுவாசிப்பதற்கு சிரமத்திற்குள்ள நோயாளி ஒருவரை படியில் தூக்கிச் சென்றது சமூக வலைத்தளத்தில் வைரலானது.
