
🔊To listen to this news in Tamil, Please select the text.
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி தொடர்பான லஞ்ச ஊழல் வழக்கின் முடிவு குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று பிற்பகல் மணி 2.30 க்கும் மாலை 3 மணிக்குமிடையே கேள்விகளுக்குப் பிரதமர் பதில் அளிப்பார் என பிரதமர்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் நாளுமன்றத்தில் நேற்று கூறியிருந்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் குற்றச்சாட்டு கொண்டுவரும் போக்கு, சட்டத்துறை தலைவர், மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞரின் வெவ்வேறு பங்கேற்பு குறித்து எதிக்கட்சி தலைவர்களில் ஒருவரான டத்தோ தகியுடின் ஹசான் நேற்று கேள்வி எழுப்பியிருந்தார்.
