
🔊To listen to this news in Tamil, Please select the text.
மீலாது நபி ஊர்வலம் இன்று கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ் ஊர்வலம் முக்கிய வீதிகளில் புறப்பட்டு மீண்டும் மஸ்ஜித் இந்தியாவில் உள்ள பள்ளிவாசலுக்கு வந்தடைந்தது. இதன் பிறகு எம் எம் ஒய் சி இயக்கத்தின் ஆலோசகர் டத்தோ ஜவகார் அலி பேசும் போது இந்த ஊர்வலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதற்கு ஆதரவு கொடுத்த அனைத்து இயக்கங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோல வருட வருடம் இந்த ஊர்வலம் மிகச் சிறப்பாக நடைபெறும் என தெரிவித்துக் கொண்டார்.

