
🔊To listen to this news in Tamil, Please select the text.
கிப்தில் உள்ள அலெக்சான்ட்ரியா நகரில் உள்ள சுற்றுலா தலமான பாம்பிஸ் தூண் அமைந்துள்ள பகுதியில் நேற்று சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது எகிப்து போலீசார் ஒருவர் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டார். அதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பயணிகள் 2 பேரும், எகிப்தை சேர்ந்த ஒரு நபரும் சம்பவ இடத்திலேயே பலியானதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த போலீஸ்காரரரை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர் எதற்காக சுற்றுலா பயணிகளை சுட்டுக் கொன்றார் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
