29.4 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

வெள்ள நிவாரண மையங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டால் MRSM ஐ பயன்படுத்தலாம்: துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி தகவல் 

🔊To listen to this news in Tamil, Please select the text.

வெள்ளப்பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

ஒருவேளை வெள்ள நிவாரண மையங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டால் அதிகாரிகள் MRSMஐ பயன்படுத்தலாம் என்று துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி கூறினார் 

இதுவரை கிளாந்தான் மாநிலத்தில் 550 வெள்ள நிவாரண மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 

MRSMஇல் புதிய வெள்ள நிவாரண மையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் நிர்வகிப்பு செயற்குழுவின் நிர்வாகியான அவர் கருத்துரைத்தார் 

மதியம் 3 மணி வரை கிளாந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20ஆயிரத்திலிருந்து 64ஆயிரத்தைத் தாண்டியது. அவர்கள் அனைவரும் முறையே 237 வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles