
பினாங்கு மாநிலத்தில் 2024ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு எழுதும் மாணவர்கள் யாவரும் கேட்டல், எழுதுதல் ஆகிய தேர்வுகளை எதிர்கொள்ள வர வேண்டும் என்று பினாங்கு மாநில கல்வி இலாகா வேண்டுகோள் விடுத்துள்ளது
எதிர்வரும் டிசம்பர் 31ஆம் தேதி மலாய்மொழி, ஆங்கில மொழிகளுக்கான கேட்டல் தேர்வு நடைபெறவுள்ளது.
மேலும், எஸ்.பி.எம் தேர்வு எழுதுதல் அடுத்தாண்டு ஜனவரி 2ஆம் தேதி முதல் 6 பிப்ரவரி வரை நடைபெறவுள்ளது
தேர்வுகள் இருப்பதால் மாணவர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். பிள்ளைகளின் வருகையைப் பெற்றோர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று பினாங்கு மாநில கல்வி இலாகா கேட்டுகொண்டது
