
புரோட்டோன் கார் விற்பனையில் முன்னோடியாக விளங்க சஹாயா டெக்னோலோஜி நிறுவனம் இலக்கு கொண்டுள்ளது. அந்நிறுவனத்தின் தலைமை இயக்குநர் ஜோனி யாப் இதனை கூறினார். கோலாலம்பூர் சிகாம்புட்டில் சஹாயா டெக்னோலோஜி நிறுவனத்தின் புரோட்டோன் கார் விற்பனை மையம் அமைந்துள்ளது. தற்போது புதியதாக புரோட்டோன் இ மாஸ் கார் விற்பனை மையத்தையும் இன்று சஹாயா டெக்னோலோஜி நிறுவனம் திறந்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு முதல் இவ்விற்பனை மையம் இங்கு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. புரோட்டோன் இ-மாஸ் என்பது மலேசியாவின் முதல் மின்சார காராகும். இந்த இ-மாஸ் மின்சார கார் இப்புதிய மையத்தில் முழுக்க முழுக்க விற்பனைக்கு வைக்கப்படும்.

13 புரோட்டோன் இ மாஸ் காரை நிறுத்தும் அளவிற்கு புதிய விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. 30 கார் நிறுத்துமிடங்கள், வாடிக்கையாளர்களுக்கான அறைகள், இருக்கைகள், கார் சார்ஜர் மையங்கள் என அனைத்து வசதிகளுடன் இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது. புரோட்டோன் இ மாஸ் விற்பனை மையத்தின் திறப்பு விழாவில் புரோட்டோன் ஹோல்டிங்ஸ் துணை இயக்குநர் ரோஸ்லான் அப்துல்லா, புரோ நெட் விற்பனை பிரிவு தலைவர் சலாவத்தி, சஹாயா டெக்னோலோஜி நிறுவனத்தின் இயக்குநர் யாப் கிம் போ உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

