27.8 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

லிம் குவான் எங் மீது அவதூறு வழக்கு: 1.4 மில்லியன் அபராதத் தொகையை முஹைடின் செலுத்தினார்

அல்புகாரி அறக்கட்டளையின் வரி விலக்கு நிலை குறித்து லிம் குவான் எங் மீது சுமத்தப்பட்ட அவதூறு வழக்கின் விளைவாக முன்னாள் பிரதமர் முஹைடின் யாசின் 1.4 மில்லியன் அபராதத் தொகையை செலுத்தினார். 

லிம்மின் வழக்கறிஞர் குவோக் நெக் சியோங், ஜனவரி 27-ஆம் தேதி காலக்கெடுவிற்கு முன்னதாக, மீதமுள்ள 1 மில்லியனை நேற்று லி குவான் எங் கணக்கில் மாற்றியதாக உறுதிப்படுத்தினார். 

முன்னதாக, கடந்த டிசம்பரில் 4 லட்சம் ரிங்கிட் செலுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

டிசம்பர் 16-ஆம் தேதி, நீதிபதி Roz Mawar Rozain  தீர்ப்பை நிபந்தனையுடன் நிறுத்தி வைக்க முஹைதினுக்கு உத்தரவிட்டார். 

தடை உத்தரவின் விதிமுறைகளின் ஒரு பகுதியாக, டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அவர் 4 லட்சம் ரிங்கிட் செலுத்த வேண்டும், மீதமுள்ள 1 மில்லியன் ரிங்கிட்டை ஜனவரி 27 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles