
அல்புகாரி அறக்கட்டளையின் வரி விலக்கு நிலை குறித்து லிம் குவான் எங் மீது சுமத்தப்பட்ட அவதூறு வழக்கின் விளைவாக முன்னாள் பிரதமர் முஹைடின் யாசின் 1.4 மில்லியன் அபராதத் தொகையை செலுத்தினார்.
லிம்மின் வழக்கறிஞர் குவோக் நெக் சியோங், ஜனவரி 27-ஆம் தேதி காலக்கெடுவிற்கு முன்னதாக, மீதமுள்ள 1 மில்லியனை நேற்று லி குவான் எங் கணக்கில் மாற்றியதாக உறுதிப்படுத்தினார்.
முன்னதாக, கடந்த டிசம்பரில் 4 லட்சம் ரிங்கிட் செலுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
டிசம்பர் 16-ஆம் தேதி, நீதிபதி Roz Mawar Rozain தீர்ப்பை நிபந்தனையுடன் நிறுத்தி வைக்க முஹைதினுக்கு உத்தரவிட்டார்.
தடை உத்தரவின் விதிமுறைகளின் ஒரு பகுதியாக, டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அவர் 4 லட்சம் ரிங்கிட் செலுத்த வேண்டும், மீதமுள்ள 1 மில்லியன் ரிங்கிட்டை ஜனவரி 27 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
