27.3 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

சட்டமன்றத்திற்குள் படுத்து தூங்கி ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்

ராஜஸ்தானில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்திற்கு போர்வைகள், மெத்தைகள் கொண்டுவந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜஸ்தான் அரசாங்கத்தின் ‘லக்பதி தீதி’ திட்டம் குறித்த விவாதத்தின் போது பாஜக அமைச்சர் அவினாஷ் கெலாட், “முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை “ஆப்கி தாதி” (உங்கள் பாட்டி) என்று கூறினார்.

இதற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, இதற்காக பாஜக அமைச்சர் அவினாஷ் கெலாட் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.இதனையடுத்து ஆறு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles