
செந்துல் தண்டாயுதபாணி ஆலயத்தின் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு தினசரி நகரத்தார்கள் சிறப்பு அர்ச்சனை தீப வழிபாடு செய்து வருகிறார்கள். அந்த வகையில் தொழில் அதிபர் டத்தோ ராமநாதன் செட்டியார் குடும்பத்தினர் சார்பில் முருகனுக்கு சிறப்பு பூஜை செய்து தீப வழிபாடு செய்யப்பட்டது. அவர் அங்கு வருகை தன பக்தர்கள் அனைவருக்கும் செட்டியார் மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
