
அண்மையில் கலிபா உணர்வகத்தில் ஒற்றுமை இயக்கம் இஸ்லாமிய இயக்கம் இணைந்து மற்றும் சிலாங்கூர் மாநில இந்து ஆலயங்களின் இயக்கமும் இணைந்து நோன்பு திறப்பு செய்தனர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒற்றுமை இயக்கம் இஸ்லாமிய இயக்கத்தின் சார்பில் பஷீர், சிலாங்கூர் மாநில இந்து ஆலயங்களின் இயக்கத்தின் சார்பில் தீபக்குமார், ரவிச்சந்திரன் சந்திரசேகர் மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் இணைந்து இந்த நோன்பு திறப்பை தொடக்கி வைத்தனர். பஷீர் கூறும்போது வருடா வருடம் இந்த நோன்பு திறப்பு நடைபெற்று வருகிறது.

நம் இந்திய இயக்கங்களுடன் முஸ்லிம் இயக்கங்களுடன் இணைந்து இந்த நோன்பு திறப்பு நடைபெறுவது சிறப்பானதாகும். இதில் அனைவரும் ஒற்றுமையோடு இருந்து சகோதர பாசத்தோடு நோன்பு பெருநாளை கொண்டாடுவோம் என்றார்.
