
ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தின் 55வது வருடாந்திர திருவிழாவும், தீமிதி உற்சவமும் வருகிற 24ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.
திருவிழா நாளன்று காலையிலிருந்தே பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை அம்மனுக்கு செலுத்தி வழிபாடு செய்வார்கள். தொடர்ந்து நடைபெறும் தீமிதி ஊர்வலத்தில் பால்குடம், தீச்சட்டி ஏந்தி பக்தர்கள் அம்மனை வணங்குவார்கள்.

இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெறும்.
அனைவரும் திரளாக வந்து கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெறுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
