
ஷா அலாம் பத்ரகாளியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆடித் திருவிழா மாங்கல்ய பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் அதிகமான பெண்கள் பக்தர்கள் கலந்து கொண்டு, குத்துவிளக்கு ஏற்றி தங்கள் நேர்த்திக் கடனை அம்மனுக்கு செலுத்தினர்.

விழாவை ஒட்டி அம்மன் பல்லாக்கில் வீதியுலா வந்தது. மேலும், அன்னதானமும் பக்தர்களுக்காக நடைபெற்றது.
அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களின் மனங்களை கவர்ந்தது. கோவில் நிர்வாகம் சிறப்பான முறையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது.

“இந்த விழாவில் பங்கேற்று சிறப்பித்த அனைவருக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்” என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
