
ஜலான் ஈப்போவில் அமைந்துள்ள குயில் மண்டபத்தில், டாக்டர் ஜீவன் ராஜ் – டாக்டர் உபன்யா தம்பதியரின் அன்பு மகள் ஷாய்னா அவர்களின் முதலாவது பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் பல குடும்பத்தினர், நண்பர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு நன்றியை தெரிவித்த டாக்டர் ஜீவன் ராஜ்,
“என் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நன்றி. குறிப்பாக இந்த விழாவை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்த டத்தோஸ்ரீ ஆர்.கே, டத்தின்ஸ்ரீ லதா மற்றும் கிரண் சுமித்ரா குடும்பத்தினருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்” என்று தெரிவித்தார்.

