
ஷா அலாம் மகாகாளியம்மன் ஆலயத்தின் வருஷாந்திர திருவிழாவும் தீமிதி உற்சவமும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அதிகமான பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி ஏந்தி அம்மனுக்கு தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.

சிறப்பு வருகையாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், டத்தோ டி. மோகன், பிரபல தொழிலதிபர் ஸ்ரீ மற்றும் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வருகை தந்த அனைவருக்கும் டத்தோ ஜோ சரவணன் நன்றி தெரிவித்தார். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டு, அதில் பெருமளவில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

