
மலேசியாவில் பணிபுரிந்து வந்த தமிழக நிருபர் முருகன், எலும்பு முறிவு காரணமாக தற்போது காரைக்குடி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவரின் சிகிச்சை நிதிக்காக, தமிழகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற உஞ்சனை அம்பலம் ராமசாமி அவர்களின் P.R.O ரவி அவர்கள் நேரில் மருத்துவமனைக்குச் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் முருகனின் மருத்துவச் செலவுக்காக மலேசிய வெள்ளி 500 அளவில் நிதியுதவியை வழங்கி, “என்னால் முடிந்த அளவிற்கு தொடர்ந்தும் உதவி செய்வோம்” என தெரிவித்தார்.
இந்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் முருகன், “ரவி அவர்களுக்கும், அம்பலம் ராமசாமி அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.
