27.6 C
Kuala Lumpur
Wednesday, July 8, 2026

Vetri

ஜொகூர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே முதன்மை இலக்கு – டாக்டர் மஸ்லீ மாலிக்

🔥 Views : 2,975
👁 Reading Now : 54

ஜொகூர் மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்துவதே தனது முதன்மை இலக்கு என்று, புத்ரி வங்சா சட்டமன்றத் தொகுதியில் பிகேஆர் சார்பில் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளராகப் போட்டியிடும் டாக்டர் மஸ்லீ மாலிக் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜொகூரின் அனைத்து மாவட்டங்களிலும் சமமான வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்பதற்கான புதிய சமூக மேம்பாட்டு நோக்கத்தை பக்கத்தான் ஹரப்பான் முன்வைத்துள்ளதாக கூறினார்.

“பக்கத்தான் ஹரப்பானின் முக்கிய நோக்கம், சாதாரண மக்கள் முதல் அனைத்து தரப்பினரின் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாகும். இந்தத் தேர்தலில் மக்களின் ஆதரவைப் பெற்று, ஜொகூரில் புதிய வளர்ச்சி அத்தியாயத்தை உருவாக்க நாங்கள் பாடுபடுவோம்,” என்றார்.

மாநிலத்தின் வளர்ச்சி குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் குவியாமல், அனைத்து மாவட்டங்களுக்கும் சமமாக சென்றடைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“நாம் விரும்பும் ஜொகூர் என்பது ஒவ்வொரு மாவட்டமும் சமச்சீரான வளர்ச்சியை அடையும் மாநிலமாக இருக்க வேண்டும். தெற்கு ஜொகூரில் மட்டும் வளர்ச்சி குவியாமல், ஒவ்வொரு குடிமகனும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை அனுபவிக்க வேண்டும்,” என்று மஸ்லீ மாலிக் கூறினார்.

முன்னாள் கல்வி அமைச்சரான அவர், இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல்வேறு பொருளாதாரத் திட்டங்களை வகுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

புதிய மற்றும் மூலோபாய முதலீடுகளை மாநிலத்திற்கு ஈர்ப்பதன் மூலம் அதிக சம்பளமுள்ள வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும், அதன் மூலம் சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றும் ஜொகூர் இளைஞர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்குத் திரும்பி குடும்பத்துடன் வாழும் சூழலை உருவாக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles