27.2 C
Kuala Lumpur
Saturday, September 19, 2026

Vetri

அணைகளில் நீர்மட்டம் 35.76% ஆக சரிவு – நெல் விவசாயிகளுக்கு சவால்!

🔥 Views : 1,777
👁 Reading Now : 62

இரண்டாவது நெல் சாகுபடி பருவம் தொடங்கவுள்ள நிலையில், மூன்று முக்கிய பாசன அணைகளின் நீர்மட்டம் சராசரியாக 35.76 சதவீதமாகக் குறைந்துள்ளதால், நெல் விவசாயிகளுக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளதாக முடா வேளாண்மை மேம்பாட்டு ஆணையம் (MADA) தெரிவித்துள்ளது.

MADA நேற்று வெளியிட்ட தகவலின்படி, Pedu அணையில் 36.99 சதவீதம், Ahning அணையில் 44.33 சதவீதம், Muda அணையில் 11.88 சதவீதம் என்ற அளவில் நீர் இருப்பு பதிவாகியுள்ளது.

குறைந்த அளவிலான நீர் இருப்பு காரணமாக, எதிர்வரும் இரண்டாவது நெல் சாகுபடி பருவத்துக்கான பாசனத் தேவைகள் மழைப்பொழிவைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக MADA தெரிவித்துள்ளது.

மேலும், மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் கணிப்பின்படி, இந்த ஆண்டு இறுதியில் El Niño நிகழ்வு ஏற்படுவதற்கான சாத்தியம் 96 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் நிலைமை மேலும் சவாலாகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

El Niño வலுவான நிலையை அடைந்தால், அதிக வெப்பம் மற்றும் வறட்சியான வானிலை ஏற்படுவதுடன், மழைப்பொழிவு பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் அதிகரிக்கலாம்.

இதன் காரணமாக, முடா பகுதியில் நீர் கிடைப்பதிலும் நெல் சாகுபடியிலும் சவால்கள் ஏற்படக்கூடும் என MADA தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், MADA-வின் நீர் வழங்கல் மற்றும் நெல் சாகுபடிக் குழு, இரண்டாவது நெல் சாகுபடி பருவத்தை செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்குவதற்கு நிர்ணயித்துள்ளது.

முதல் கட்ட விதைப்பு காலம் செப்டம்பர் 23 முதல் நவம்பர் 4 வரை, இரண்டாவது கட்டம் அக்டோபர் 3 முதல் நவம்பர் 14 வரை, மூன்றாவது கட்டம் அக்டோபர் 13 முதல் நவம்பர் 24 வரை நடைபெறவுள்ளது.

முதல் சாகுபடி பருவத்தைப் பொறுத்தவரை, 100,641 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் தற்போது இறுதிக்கட்ட பூக்கும் மற்றும் அறுவடை நிலையை எட்டியுள்ளன.

செப்டம்பர் 16ஆம் தேதி நிலவரப்படி, முன்-நனைப்பு பணிகள் 100 சதவீதமும், நிலத் தயாரிப்பு பணிகள் 99 சதவீதமும், நெல் நடவு 98.4 சதவீதமும் நிறைவடைந்துள்ளன. அதேவேளை, அறுவடைப் பணிகள் 9.3 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக MADA தெரிவித்துள்ளது.

நீர் பற்றாக்குறை நிலையை கருத்தில் கொண்டு, விவசாயிகள் நீரை சிக்கனமாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துமாறு MADA கேட்டுக்கொண்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளின் பாசனத் தேவையைச் சமாளிக்க, கால்வாய் நீரை மறுசுழற்சி செய்வதை அதிகப்படுத்துவதுடன், தேவையான இடங்களில் நகர்த்தக்கூடிய நீர்ப்பம்புகள் (mobile pumps) பயன்படுத்தப்படும் என்றும் MADA தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles