
பினாங்கு பாலத்தின் மீது காரை நிறுத்தி வைத்து விட்டு கடலில் குதித்த இந்திய இளம்
பெண் அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டார்.
நேற்று மாலை பினாங்கின்
இரண்டாவது சுல்தான் அப்துல் ஹலீம் பாலத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 24
வயது இளம் பெண்ணை,புலாவ் அமான் பகுதியில் மீன் பிடித்துக்
கொண்டிருந்த மீனவர்கள் காப்பாற்றினர்.
தமது வீரா ரகக் காரை பாலத்தின் மீது நிறுத்தி வைத்து விட்டு கடலில் குதித்த அப்பெண் பேரா தைப்பிங் என்ற
முகவரியைச் சேர்ந்த நித்தியா கணேசன் என அடையாளம் காணப்பட்டது.
இதுவொரு தற்கொலை முயற்சியா என போலீசார விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
