
மலேசியாவில் அரசியல் நிலவரம் மீண்டும் சூடு பிடித்திருக்கும் வேலையில் அம்னோ உச்சமன்றத்தின் அவசரக் கூட்டம் அதன் தலைவர் டத்தோஸ்ரீ அமாட் ஜாஹிட் ஹமிடி தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் 56 உச்சமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
நடப்பு அரசாங்கத்திலிருந்து அம்னோ வெளியேறுவதற்கு பெரும்பாலான உச்ச உறுப்பினர்கள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
அம்னோ தேசியத்தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி அமைதியான முறையில் உச்சமன்ற உறுப்பினர்கள் ஆதரவை பெற்றிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரம் கொடி கட்டியது..
எழுத்துபூர்வமாக அம்னோ உச்சமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இவருக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு முன்னதாகவே நடப்பு அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு அம்னோ உச்சமன்றம் அதிரடி முடிவு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



