
பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திலிருந்து அம்னோ வெளியேற அம்னோ உச்சமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு முன்னதாகவே நடப்பு அரசாங்கத்திலிருந்து வெளியேற அம்னோ உச்சமன்ற உறுப்பினர் கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு வழங்கி வரும் ஆதரவை மீட்டுக் கொள்ளவும் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குள் இந்த ஆதரவு மீட்டு கொள்ளப்படுவதற்கான சாத்தியம் இருக்கிறது என்று அம்னோ உச்ச மன்றக் உறுப்பினர் கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அம்னோ தேசியத்தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹாமிட் தலைமையில் அம்னோ உச்சமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
