
பல போராட்டங்களுக்கு மத்தியில்
பெர்ஜூவாங் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதாக அதன் தலைவர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.
நேற்று
பெர்ஜுவாங் கட்சிக்கு முறையான பதிவு கிடைத்துள்ளது.
பெர்ஜுவாங் கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை நான் அறிவிக்க விரும்புகிறேன்.
ஓர் அரசியல் கட்சியாக, பெர்ஜுவாங் கட்சியைப் பதிவு செய்த அரசாங்கத்திற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நாங்கள் பிரச்சினைகளை ஏற்படுத்த விரும்பவில்லை, எதையும் சட்டத்தின் மூலம் செய்ய விரும்புகிறோம்.
பெர்ஜூவாங்கை பதிவு செய்ய முடியாது என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை.
இறுதியாக, பெர்ஜுவாங் கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது, பெர்ஜுவாங்கில் சேர விரும்புவோர் வரவேற்கப்படுகிறார்கள். விண்ணப்பிக்கலாம், இனிமேல் நாங்கள் இன்னும் சுறுசுறுப்பாகச் செயல்படுவோம் என்று நம்புகிறேன் என்று அவர் கூறினார்.
