
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொள்கிறோம் என்று அம்னோ உச்சமன்ற முடிவை அம்னோ எம்பிக்கள் ஒரு வழிகாட்டியாகக் கொள்ள வேண்டுமென்று அதன் தலைமைச் செயலாளர் டத்தோ அமாட் மஸ்லான் கேட்டுக் கொண்டுள்ளார். நாடாளுமன்றத்தில் வாக்களிப்பதற்கு அம்னோ எம்பிக்கள் சொந்தமாக முடிவு செய்துகொள்ளலாம்.
இருப்பினும் அவர்கள் கட்சியின் முடிவை ஒரு வழிகாட்டியாக கொள்ள வேண்டும் என்றார் அவர்.
நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது வாக்களிப்பு நடைபெற்றால் அம்னோ எம்பிக்கள் சொந்தமாக முடிவு செய்துகொள்ள அம்னோ உச்சமன்றம் வாய்ப்பு வழங்கி உள்ளது.
கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டு அனைத்து அம்னோ எம்பிக்கள் கடமையாற்ற வேண்டும் என்றார் அவர்.
