
பிரதமர் டான்ஸ்ரீ முஹிடினுக்கான ஆதரவை மீட்டுக் கொண்டிருக்கும்
அம்னோவின் முடிவுக்குப் பிறகு,பாக்காதான் ஹராப்பான் பெரிய கூட்டணியாக
விளங்குமென அமானா கட்சியின் தேசிய உதவித் தலைவர் டத்தோஸ்ரீ
முஜாஹிட் யூசோப் ராவா தெரிவித்தார்.
இருப்பினும் புதிய அரசாங்கத்தை
அமைப்பதற்கு 89 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.இதனை
வைத்து ஆட்சியை அமைக்க முடியாது என கூறிய அவர்,
நிலையான பலமான அரசாங்கத்தை அமைப்பதற்கு தேசிய முன்னணி நாடாளுமன்ற
உறுப்பினர்கள்,சபா,சரவாக் மற்றும் பெர்ஜூவாங் கட்சி
தலைவர் துன் மகாதீர் முகமது ஆகியோர் ஆதரவு தேவை என்று பாரிட் புந்தார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான
அவர் சொன்னார்.
